web log free
May 10, 2025

ஹேமசிறி பெர்னாண்டோ கைது


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு முன்னதாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், வயிற்றில் ஏற்பட்டதாக கூறப்படும் வலி காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd