web log free
September 03, 2025

பொலிஸ்மா அதிபருக்கும் விளக்கமறியல்

நாரஹேன்பிட்டியவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் கைதுசெய்யப்பட்ட கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, பொலிஸ்மா அதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், அவரை இன்று (02) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd