web log free
June 28, 2026

குற்றவாளிகள் பலருடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு

போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிழல் உலகக் கும்பல்களுடன் அரசியல்வாதிகளுக்கு உள்ள தொடர்பு அண்மைய கைது நடவடிக்கைகள்மூலம் அம்பலமாகி வருவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டோரை விடுவிக்க பல மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கடந்த காலங்களில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க அரசு வழிமுறைகளே தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்தகைய சம்பவங்களை அப்படியே மறக்கடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள் தங்கள் செயல்களுக்குக் கண்டிப்பாகப் பொறுப்பேற்பதை அரசு உறுதிசெய்யும் என்றும் அமைச்சர் விஜெபால உறுதிகூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd