சிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, தேனுக விதானகமகே, இந்திக அனுருத்த, பிரியங்கார ஜயரத்ன ஆகியோர் சிங்கப்பூருக்கு நேற்று சென்றிருந்தனர்.
இதன் போது, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தம்மை வந்து பார்த்துச் சென்றது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போது தாம் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.