web log free
April 27, 2024

அநீதி குறித்து அறிக்கை கோரல்

பண்டாரகமை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஹசன் பாத்திமா என்ற பெண்ணுக்கு இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் அநீதிகள் குறித்து, பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் அறிக்கை கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் அறிக்கை கோரியுள்ளதுடன், அறிக்கை கிடைத்த பின்னர் இது தொடரபான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.