web log free
September 19, 2024

இனவாத போர்வையில் மறைக்க முயற்சி - ரத்தன தேரர்

இனவாதம் என்ற போர்வையில், பயங்கரவாத நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதாக, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சஹ்ரானுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து, அவர்களை சிறையில் அடைக்காமல், அவர்களுக்கு 3 மாதங்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை எனவும், இனவாதம் தூண்டப்படுவதால், பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் குறிப்பிட்டுள்ளார்.