web log free
May 01, 2024

தாஜ் ஹோட்டலிடம் விபரம் கோரியது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் பெயர் விபரங்களை தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு, பாராளுமன்ற விசேட தெரிவுக்கு அந்த ஹோட்டலின் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் வாக்குமூலத்தின் அடிப்படையாகக் கொண்டே அந்த விபரங்களை தெரிவுக்கு நேற்று (10) மாலை கோரியுள்ளது என அறியமுடிகின்றது.