web log free
September 05, 2025

தொண்டா, சம்பந்தன், மஹிந்த இன்று முடிவு

ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன, இன்று(11) காலை, பாராளுமன்றத்தில் தனித்தனியாக கூடி முடிவுகளை எடுக்கவுள்ளன என அறியமுடிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd