web log free
March 29, 2024

கடற்படை தளபதியின் பதவி காலம் நீடிப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் பியல் த சில்வாவின் சேவை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேனவினால் ஒரு வருட சேவை கால நீடிக்கப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வைஸ் அட்மிரால் பியல் த சில்வா 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி கடற்படை தளபதியாக நியமனம் பெற்றார்.

அவர் இந்தமாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் பதவிகாலத்தை ஜனாதிபதி ஒரு வருடத்தினால் நீடித்துள்ளார்.