web log free
May 01, 2024

இராணுவ ஜீப் கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதேசத்தில் இராணுவ ஜீப் வண்டியொன்று
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கோப்பாபுலவு பகுதியில் இன்று (14) அதிகாலை 5.40 மணியளவில் குறித்த ஜீப்
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்த நிலையில்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை மற்றும் இராணுவ
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.