web log free
April 26, 2024

இறப்பர் ஆணுறுப்புடன் குள்ள மனிதன் கைது


இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அச்சுறுத்திக்கொண்டிருந்த குள்ளமனிதன், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, கலவானை, வெலிகும்புர மற்றும் அளுத்வத்த ஆகிய பகுதிகளில், இந்த குள்ளமனிதன் பெண்கள் பலரை அச்சுறுத்தி வந்துள்ளார்.

முகம் முழுவதும் முடிவளர்த்திருக்கும் இந்த உருவம், குள்ளமாக இருக்கும் என்றும் பொலிஸாரின் கவனத்துக்கு அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கொண்டுவந்துள்ளனர்.

பொதுமக்களின் தகவலின் பிரகாரம் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், எவரையும் கைது செய்யவில்லை.

இந்நிலையில், கலவானை பஸ் தரப்பிடத்தில், வித்தியாசமான பொதியுடன் நின்று கொண்டிருந்தவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அக்குரஸ்ஸையைச் சேர்ந்த 34 வயதான அந்த நபரே, இவ்வாறு குள்ளமனிதனை போல வேடமிட்டு, பெண்களை அச்சுறுத்தியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அந்தப் பொதியில் ஒரு தொகை, ஆணுறைகளும், இறப்பரிலான ஆணுறுப்பு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Last modified on Wednesday, 17 July 2019 01:44