web log free
April 05, 2026

கன்னியா விவகாரம் - விசாரிப்பதாக ஜனாதிபதி உறுதி

கன்னியா விவகாரம் தொடர்பில் விசாரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசியபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக, முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd