web log free
September 05, 2025

கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த மனுவை செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு விசாரணை தொடர்பாக விசேட மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டு மனு நீதியரசர்களான சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி தெல்தெனிய ஆகியோர் முன்னைலையில் விசாரணைக்கு வந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd