web log free
December 07, 2025

பூஜித் - ஹேமசிறியின் எதிராக மீளாய்வு மனு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனுவை
சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாக தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்க தவறிய குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை, சட்ட விரோதமானது என, சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd