web log free
May 10, 2025

வயோதிபரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக தனிமையில் இருந்து வந்த வயோதிபரான கணேசமூர்த்தி சாமித்தம்பி (74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழமையாக தனது வீட்டில் உள்ள மாந்தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி விட்டு அருகில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று வரும் இவர், நேற்றைய தினம் மகளின் வீட்டிற்கு வராமையினால் அவரை தேடிச் சென்ற மகள் தனது தகப்பனார் மலசலகூடத்தில் இறந்து கிடப்பதை கண்டு மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd