web log free
September 19, 2024

பிரதேச சபை தலைவர் கைது

நபரொருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிரில் முனசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது கடந்த 18ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தலைவர் சிரில் முனசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.