web log free
May 10, 2025

பிரதேச சபை தலைவருக்கு பிணை

கைதுசெய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில், இன்று காலை (22) பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க கைதுசெய்யப்பட்டார்.

அவர், தாங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நீதவான் எல்.டீ. வருஸவிதான பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd