web log free
January 21, 2026

“ஐ.எஸ் தொடர்புக்கு சாட்சிகள் இல்லை”

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன், ஐ.எஸ் அமைப்புக்கு ​தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லையென, குற்றப்புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், இன்று சாட்சியம் வழங்கும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd