web log free
June 24, 2026

நிலந்த ஜெயவர்தன 4 மணி நேர சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக, அரச புலனாய்வுத் துறையின் தலைவர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன 4 மணி நேர சாட்சியம் வழங்கியுள்ளார்.

நேற்று (24) இரவு அவர் தனது வாக்கு மூலத்தை தனி இடம் ஒன்றில் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd