web log free
September 20, 2024

துப்பாக்கிக்சூட்டில் ஒருவர் பலி

கொஹுவல - ஜம்புகஸ்முல்ல மாவத்தை பகுதியில் ஜீப் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, இனந்தெரியாத நபர்கள் நடத்திய, துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாதிவலை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையிலிருந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் கூறியுள்ளனர்.