web log free
September 19, 2024

நாடுமுழுவதும் 5924 சாரதிகள் கைது

24 மணித்தியாலத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திய 219 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5924 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது