web log free
March 29, 2026

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கைதிகள் மீது தாக்குதல்


அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணித்துள்ளார்.

அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான மூவரடங்கிய குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் அறிக்கைக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:33
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd