web log free
September 20, 2024

இடைக்கால தடை கோரிய மனு மீது நாளை தீர்ப்பு

இலங்கைக்கு கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படும் என, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று அறிவித்துள்ளது.

குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

அத்துடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளை மன்றுக்கு அழைப்பதற்கான நோட்டீஸ் அனுப்புவது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.