web log free
February 04, 2026

பொதியில் வந்த போதை மாத்திரைகள்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் பொதி ஒன்றில் இருந்து 3050 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

போர்த்துக்கல் நாட்டில் இருந்து குறித்த போதை மாத்திரைகள் உள்ளடங்கிய பொதி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd