web log free
February 04, 2026

தெரிவுக் குழு மீது விஜேதாச குற்றச்சாட்டு

எந்த பயங்கரவாத தாக்குதலுடனும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தொடர்பு கொண்டவர் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதே, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் இலக்கு என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நாடாளுமன்றத் தெரிவுக் குழு மேற்கொண்டு வருகிறது.

இதற்குள்ள பல இலக்குகளில், அமைச்சர் றிசாட் பதியுதீனை சுத்தப்படுத்துவதும் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd