web log free
September 20, 2024

அஜித்தை கடுந்தொனியில் எச்சரித்த ரணில்

இராஜாங்க அமைச்சர்களான சுஜீவ சேனசிங்ஹ, இரான் விக்கிரமரத்ன ஆகியோர், புதிய கூட்டணிக்கு கடுமையான எதிர்ப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் வெளிப்படுத்தினர். அதில்,  இராஜாங்க அமைச்சர் அஜித் ​பி பெரேராவும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 

அப்போது, அஜித் பெரேராவை  கடுந்தொனியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார் ,

கட்சியின் ​தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அமைச்சர் ஜோன் அமரதுங்க, தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர். வைத்தியர் காவிந்த ஜயவர்தன எம்.பி., ஆகியோர், தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர் என் அறியமுடிகின்றது.