web log free
September 19, 2024

வெடிபொருளுடன் நால்வர் கைது

வனாத்தவில்லு, மங்களபுர, கரடிபுவல் பிரதேசத்தில் உள்ள தென்னை மர தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

100 கிலோ கிராம் எடையுடைய குறித்த வெடிபொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களை பொலிஸார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், 100 டெட்டனேட்டர்களும் இரசாயன பொருட்களும் கைபற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.