web log free
February 06, 2026

விடைத்தாள் திருத்தும் பணிகள் 15ஆம் திகதி முதல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகும்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த பரீட்சையில் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd