web log free
September 03, 2025

இராஜினாமா செய்தார் சாந்த பண்டார

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

மக்கள் வாக்குகளின் ஊடாக நாடாளுமன்றுக்கு தெரிவாகும் நோக்கில் அவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க உயிரிழந்ததை அடுத்து, வெற்றிடமாகியுள்ள அவரது நாடாளுமன் உறுப்பினர் ஆசனத்துக்கு, சாந்த பண்டார தெரிவாகவுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd