web log free
May 09, 2025

சுழற்றியடித்த சூறாவளியால் 22 வீடுகள் சேதம்

சுழற்றியடித்த சூறாவளி காற்றினால், கேகாலை,வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 22 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால்  32 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ள. களனிவெளி ரயில் சேவையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை வேளையில் இந்த சூழல்காற்று, நாடளாவிய ரீதியில் ஊடறுத்து வீசியுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd