web log free
September 19, 2024

கொழும்பு நகரில் புதிய நீர் வியோகத்திட்டம்

களனி கங்கையின் தெற்கு பிரதேசத்திற்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக, கம்பஹா மாவட்ட மக்களுக்கு தேவையான நீர் வியோகம் இடம்பெறும் என்று அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான முகாமையாளர் பியல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு நகருக்கு புதிய நீர் வியோகத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என்றும் முகாமையாளர் கூறினார்.

களனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மணல் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென 24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.