web log free
February 04, 2026

மஹிந்த அதிரடி அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தமுடியுமா என, உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கேட்டுள்ளார். அதனடிப்படையில் சட்டரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமாயின் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தமுடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அவ்வாறு சட்டசிக்கல் ஏற்படாது என அறிவிக்கப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதமான இடையூறுகளும் இன்றி, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தமுடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார். 

Last modified on Tuesday, 13 August 2019 00:54
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd