web log free
May 20, 2024

2018/2019 கல்வியாண்டுக்கு இரண்டு புதிய பாடத்திட்டங்கள்

 

2018/2019 ஆம் கல்வியாண்டுக்காக, பல்கலைக்கழகங்களுக்கு 31,158 மாணவர்கள் சேர்த்துகொள்ளப்படவுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை 645 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துகொள்ளப்படவுள்ளர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பேராசிரியர் பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார்.


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் பாடத்திட்டங்கள் இரண்டு,சமூக ஓவியியல் மற்றும் புவியியல் தகவல் அறிவியல் எனும் பெயர்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


அந்த பாடத்திட்டங்களுக்கு தலா 50 மாணவர்கள் என்றடிப்படையில் 100 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.