web log free
May 20, 2024

வெடிப்பொருட்களுடன் கைதானவர்களுக்கு 90 நாள் தடுப்பு


வனாத்தவில்லுவ கரடிபுவல் பிரதேசத்தில், கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேநபர்கள் நால்வரையும், 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியனவற்றுக்கே இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


மாவனெல்ல பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட புத்தர் சிலைகள் உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே, வனாத்தவில்லுவ பிரதேசத்தில், இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


மேற்படி இரு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொருவரை தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.