web log free
May 20, 2024

வாயை அடைத்தார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் வாய் திறக்கக்கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தமையால், கலந்துகொண்டிருந்த சகலரும் கப்சிப் என, மௌமாய் இருந்துவிட்டனர்.

அலரிமாளிகையில் நேற்றுமாலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில், பாராளுமன்றத்தில் நாளை(இன்று) நடைபெறும் விடயதானங்கள் பற்றிமட்மே கலந்துரையாடுமாறு வலியுறுத்தினார்.

எனினும், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் சஜித் பிரேமதாஸாவின் ஆதரவாளர்களும் எதனையும் பேசாமல், மௌனமாய் இருந்துவிட்டனர்.