web log free
May 02, 2024

பாராளுமன்றில் பலர் வழுக்கி விழுந்தனர்

இலங்கை பாராளுமன்றத்துக்குள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும், ஆகக் குறைந்தது 11 பேர் வழுக்கி விழுந்துவிட்டனர்.

பாராளுமன்றத்தில் முதலாவது மாடியிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலாவது மாடியின் கீழ் தரையை சுத்தப்படுத்துவதற்கான ஒருவகையான பதார்த்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பதார்த்தம் தவறானது என்பதனால் வழுக்கும் தன்மையில் அந்த தரை இருக்கிறது. 

அந்த வழுக்கும் தன்மையை இல்லாமல் செய்வதற்கு இன்னும் சில திரவியங்கள், பதார்த்தங்கள் போடப்பட்டாலும், வழுக்கும் தன்மை நேற்று நள்ளிரவு வரையிலும் அகற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக, வழுக்கும் இடங்களில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதில், இவ்விடங்களில் வழுக்கும் ஆகையால் கவனமாக பயணிக்கவும் என அந்த பலகைகளில் எழுதப்பட்டுள்ளன. 

 

 

Last modified on Friday, 23 August 2019 01:43