web log free
May 09, 2024

இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது


இலங்கை மீனவர்கள் 10 பேர், வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மீன்பிடித் திணைக்களம் அறிவித்துள்ளது.


மாலைத்தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலேயே இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்த திணைக்களத்தின் சோதனை நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்தார்.


இயந்திர கோளாறுக்கு உள்ளான அந்த மீனவர்களின் மீன்பிடி படகுகள் இரண்டு அந்த நாடுகளின் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவைத் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன எனத் தெரிவித்த அந்த அதிகாரி, எதிர்வரும் சில நாட்களுக்குள் அந்த மீனவர்கள் நாடு திரும்புவர் என்றார்.

Last modified on Saturday, 19 January 2019 02:07