web log free
September 18, 2025

தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்தார் கோத்தா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சட்டத்திட்டங்கள், பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளன என அந்தத் தகவல்கள் தெரிவித்தன. 

Last modified on Saturday, 07 September 2019 12:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd