web log free
June 01, 2025

கெனடி கும்பா மீது சந்தேகம்


வத்தளை, ஹேகித்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரையில் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது,


எனினும், சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எந்தவொரு சந்தேகநபரும் கைதுசெய்யப்படவில்லை.


துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், போதைப்பொருள் வர்த்தகரான கெனடி கும்பா என்ற பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர் மீது பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


வத்தளை, ஹேகித்த பிரதேசத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகினர்.


காரொன்றில் பயணித்துகொண்டிருந்தவர்கள் மீது மற்றுமொரு காரில் வந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே, அவ்விருவரும் பலியாகினர். அவ்விருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் செல்விகே குழுவைச் சேர்;ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd