web log free
May 09, 2024

தங்கத்துடன் மூவர் கைது


சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் தங்கத்தை கடத்துவதற்கு முயன்ற, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் மூவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.


பட்டத்தீட்டப்படாத தங்க ஆபரணங்களாகவே, நாட்டுக்குள் கடத்துவதற்கு நேற்றிரவு முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அந்த ஆபரணங்களின் உள்நாட்டு சந்தை பெறுமதி, 45 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது என சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.