web log free
April 06, 2026

பாலியல் தொந்தரவு; 70 அதிகாரிகள் சிக்கினர்

பாலியல் தொந்தரவு, சட்டவிரோதமான அனுமதிப்பத்திரங்களை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அரச நிறுவனங்களில் உயர்பதவிகளை வகிப்போருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் 70 பேரையே, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அழைக்கவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகள், பணியிலிருந்த தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Last modified on Monday, 02 September 2019 02:09
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd