web log free
May 04, 2024

கிரிலஸ்பாமில் 12 வீடுகள் எரிந்து நாசம்

 

கொட்டகலை, கிரிலஸ்பாம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பில் இன்றுமாலை மாலை 5.00 மணிக்கு ஏற்பட்ட தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பில் 12 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீயை பிரதேச வாசிகள் இளைஞர்கள் மற்றும் பொலிஸார் பாரிய முயற்சியின் பின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், 65 மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தோட்டத்தில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களின் விடுதிகளிலும்,சிறுவர் பாராமறிப்பு நிலையம் அயலவர்களின் வீடுகளிலும் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.