web log free
May 06, 2024

‘புலனாய்வு தகவல்கள் ஜனாதிபதிக்கு மட்டுமே கிடைக்கும்’

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோவுக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் எவ்விதமான முன்னெச்சரிக்கையும் கிடைக்கவில்லை என அவர் சார்பில் உயிர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரட்ண நேற்று (05) தெரிவித்தார்.
அதேபோல, அரச புலனாய்வு சேவை, தன்னுடைய புலனாய்வு தகவல்களை ஜனாதிபதிக்கு மட்டுமே நேரடியாக அறிவிக்கும், அது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரட்ண, உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.