web log free
May 06, 2024

44 இந்தியர்களும் மிரிஹானையில் தடுத்துவைப்பு

சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில், கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் 44 பேர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 முதல் 50 வயதுகளுக்கு இடைப்பட்ட குறித்த இந்தியர்கள், கடந்த சில வருடங்களாக சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 44 பேரும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Last modified on Friday, 06 September 2019 02:54