web log free
May 09, 2025

ரணில்-சஜித் சந்திப்பில் கரடி புகுந்தது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்றிரவு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், அலரிமாளிக்கைக்கு அமைச்சர் மலிக் சமரவிக்ரவும் வருகைதந்துள்ளார் என அறியமுடிகின்றது.

இருவரும் இடையில் தனியாக சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், அமைச்சர் மலிக் சமரவிக்ரம, இந்த இரவு நேரத்தில் அலரிமாளிக்கைக்கு வருகைதந்துள்ளமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd