web log free
April 30, 2024

சஜித்தின் தாய் ரணிலுக்கு கோல்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்  தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவின் தாய் ஹேமா பிரேமதாஸ, ரணிலுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமை தொடர்பில், ரணிலுடன் ஹேமா பிரேமதாஸ கலந்துரையாடியுள்ளார் என கட்சியின் தலைமையகமான சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

சஜித் பிரேமதாஸ, எக்காரணங்களை கொண்டும், ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகிச்செல்லமாட்டார்.

அதுதொடர்பில் தன்னுடன் நெருக்கமானவர்களிடம் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் என்றும் ஹேமா பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. 

 

Last modified on Thursday, 12 September 2019 03:14