web log free
May 02, 2024

யாழ். துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்

 விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞன் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் இன்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கி. ரஜீவன் (வயது 20) என்ற இளைஞனே​ காயமடைந்துள்ளார்.

அரியாலை பகுதியில் டிரக்டர் வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற போது விசேட அதிரடிப் படையினர், அந்த டிரக்டர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும் குறித்த நபர் டிரக்டர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதை அடுத்து, விசேட அதிரடிப் படையினர் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என அறியமுடிகின்றது. 

Last modified on Saturday, 14 September 2019 14:55