web log free
September 08, 2024

‘அவர் மீறுவார் நான் மீறமாட்டேன்’

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கமசிங்கவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு தான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை  வெளியிட்டு இதனை பிரதமர் கூறியுள்ளார்.

பிரதம நீதியரசர் அல்லது சட்டமா அதிபர் ஆகியோருக்கே உயர் நீதிமன்ற நீதியரசரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியல் அமைப்பினை தான் ஒரு போதும் மீறப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர், அவ்வாறு அரசியலமைப்பினை மீறியவர்கள் குறித்து உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.