web log free
May 06, 2024

'வாருங்கள் கைகளை கோருங்கள்” அழைகிறார் சஜித்

 கட்சியிலிருந்து விலகிநிற்கும் சகலரையும், நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் தன்னுடன் இணையுமாறும், கைகளை கோர்த்துக்கொள்ளுமாறும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

“பல்வேறான கருத்து மோதல்களினால், ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி சென்றிருக்கும் பலரும், கட்சிக்காக ஒன்றாக கைகோர்ப்பதற்கு எதிர்பார்த்து நிற்கின்றனர். அது எனக்கு நன்றாகவே தெரியும்.

கருத்துமோதல்களை கலந்துரையாடி தீர்த்துகொள்ளலாம்.

அதனைதவிர, மாற்று வழிகளே இல்லை” என்றார்.

பல்வேறான எண்ணங்களினால், கட்சியிலிருந்து விலகிநிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்காக தங்களை அர்ப்பணித்து செயற்பட்ட சகல எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சகல உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், கட்சிப் பிரதிகள் உள்ளிட்ட அணைவரும் இணைந்து கட்சியையும் மக்களையும் மீளவும் வெற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக கைகோர்க்குமாறு பணிவன்புடன் கோரிக்கை விடுகின்றேன். விசேடமாக, கட்சி பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தபோது, தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுகின்றேன் என்றார்.

Last modified on Wednesday, 25 September 2019 03:12