web log free
September 03, 2025

மாத்தறையில் கடும் பாதுகாப்பு; பதற்றம் தணிந்தது

மாத்தறை – கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு ஏற்பட்டிருந்த பதற்றமான நிலைமை, தணிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

அங்கு மேலதிக பாதுகாப்புக்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இரு இளைஞர் குழுக்களுக்கு  இடையில் ஏற்பட்ட  பிரச்சினை முற்றியதால் இன்று மாலை அங்கு பதற்றம் நிலவியது.

தனிப்பட்ட பிரச்சினையே இரு குழுக்களுக்கு இடையிலான பிரச்சினையாக உருவெடுத்தது. 

சிங்கள இளைஞன் ஒருவர் மீது முஸ்லிம் இளைஞன் தாக்குதல் நடத்தியுள்ளான்.

அந்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்தே, தப்பியோடிய இளைஞனை தேடி, சிங்கள இளைஞர்கள் சென்றுள்ளனர். இதன்போது, அங்கு முஸ்லிம் இளைஞர்களும் திரண்டுள்ளனர். 

இதனால், இரு இளைஞர் குழுக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

முஸ்லிம்களின் வீடுகளின் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், விரைந்து செயற்பட்ட பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக பொலிஸாரையும் விசேட அதிரடிப்படையினரையும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளனர். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd